/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
/
நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
ADDED : டிச 28, 2025 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எரியோடு: நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட பல்நோக்கு மருத்துவ முகாம் எரியோட்டில் நடந்தது. பேரூராட்சி தலைவர் முத்துலட்சுமி தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் பொன் மகேஸ்வரி வரவேற்றார்.
எம்.எல்.ஏ., காந்திராஜன் துவக்கி வைத்தார். மாவட்ட சுகாதார அலுவலர் அனிதா, பி.டி.ஓ., வீரகடம்பு கோபு, பேரூராட்சி செயல் அலுவலர் சையது அபுதாகிர், தி.மு.க., நிர்வாகிகள் ரவிசங்கர், கார்த்திகேயன், செந்தில்குமார், பங்கேற்றனர். பணியில் இறந்த மோர்பட்டி ஊராட்சி செயலாளர் பழனிச்சாமியின் மகள் சரண்யாவுக்கு கருணை அடிப்படையிலான அரசு பணி நியமன உத்தரவை எம்.எல்.ஏ., வழங்கினார்.

