sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

திண்டுக்கல்லில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

/

திண்டுக்கல்லில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 22, 2024 04:59 AM

Google News

ADDED : நவ 22, 2024 04:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ரமணி படுகொலையை கண்டித்து திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ரமணி படுகொலையை கண்டித்தும்,பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டியும் திண்டுக்கல்லையடுத்த நல்லம நாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் அனைத்து நிலை ஆசிரியர்களும் பங்கேற்று நடத்தினர்.

தமிழ்நாடு தொடக்ககல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜேக்) சார்பில் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. டிட்டோஜேக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜான்வில்சன், ஆர்தர் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வின்சென்ட் பால்ராஜ்,கணேசன் பங்கேற்றனர்.

பழநி : பழநி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர் நாகராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இறந்த ஆசிரியைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us