ADDED : நவ 12, 2024 07:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 27 ஆண்டுகள் சிறை திண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வத்தலக்குண்டு கணவாய்பட்டி ஆசிரமம் தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சூர்யபிரகாஷ் 25. இவர் 2022ல் அதே பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். இதுதொடர்பான வழக்கு திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. சூர்யபிரகாஷூக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரண் தீர்ப்பளித்தார்.

