sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மாவட்டத்தில் ரோட்டோரங்களில் குப்பை கொட்டுவதால்  அவதி; சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு தீப்பற்றி புகைமண்டலமாவதால்

/

மாவட்டத்தில் ரோட்டோரங்களில் குப்பை கொட்டுவதால்  அவதி; சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு தீப்பற்றி புகைமண்டலமாவதால்

மாவட்டத்தில் ரோட்டோரங்களில் குப்பை கொட்டுவதால்  அவதி; சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு தீப்பற்றி புகைமண்டலமாவதால்

மாவட்டத்தில் ரோட்டோரங்களில் குப்பை கொட்டுவதால்  அவதி; சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு தீப்பற்றி புகைமண்டலமாவதால்


ADDED : நவ 17, 2025 01:57 AM

Google News

ADDED : நவ 17, 2025 01:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் நகர், புறநகர் பகுதிகள் தொடங்கி தேசிய நெடுஞ்சாலைகள் வரை ரோட்டோரங்களில் அதிகளவில் குப்பைகளை கொட்டப் படுகின்றன.

குப்பைத்தொட்டிகள் இல்லா உள்ளாட்சி அமைப்புகள் என்ற திட்டத்தால் குப்பைத்தொட்டிகள் அகற்றப்பட்டுள்ளதால், ரோட்டோரங்களில் கொட்டிச்செல்வது அதிகமாகியுள்ளது.

இதனால் துர்நாற்றம், சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. குப்பைகளில் தீப்பற்றி எரிந்து ரோடுகளில் செல்வோருக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதோடு, விபத்துக்களும் நடக்கின்றன. மேலும், ரோட்டோர மரங்களும் கருகி விடுகிறது.

நகர் பகுதியில் முக்கிய சாலைகளில் மீன், மாடு, ஆடு, கோழி, கருவாடு போன்ற இறைச்சிக் கடைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அவற்றின் கழிவுகளும் குப்பையுடன் சேர்த்து கொட்டப் படுகிறது.

இதனால் நோய் தொற்று மற்றும் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. இறைச்சி கழிவுகளை சாப்பிட தெருநாய்கள் சுற்றி வருகின்றன. இவ்வாறு சாப்பிடும் இறைச்சி கழிவுகளால் நோய் தொற்று நாய்களுக்கு ஏற்படுகிறது. நோய் தொற்றுடன் தெருக்களில் நாய்கள் சுற்றித் திரிவதால் சுகாதாரக் கேடு அதிகரிக்கிறது. இதனை கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us