sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கொடைக்கானலில் பூத்து குலுங்குகின்றன குறிஞ்சி மலர்கள்

/

கொடைக்கானலில் பூத்து குலுங்குகின்றன குறிஞ்சி மலர்கள்

கொடைக்கானலில் பூத்து குலுங்குகின்றன குறிஞ்சி மலர்கள்

கொடைக்கானலில் பூத்து குலுங்குகின்றன குறிஞ்சி மலர்கள்


ADDED : ஜன 20, 2025 12:26 AM

Google News

ADDED : ஜன 20, 2025 12:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் சிறு குறிஞ்சி பூக்களை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிக்கின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீலக்குறிஞ்சி மலர்கள் பூக்கும். குறிஞ்சி மலர்களில் 200க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இந்நிலையில் குறிஞ்சி பூ வகையை சேர்ந்த சிறு நீலக்குறிஞ்சி மலர்கள் தற்போது கொடைக்கானல் மலைப்பகுதியில் பரவலாக வனப்பகுதியில் பூத்துள்ளன.

இவ்வகை மலர்கள் கார்டி போலியா என்ற தாவரவியல் பெயரில் அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் டிச., முதல் பிப்.,வரை மலைப்பகுதியில் பரவலாக பூக்கும். சீதோஷ்ண நிலை மாற்றம் அடைந்தால் இவ்வகை மலர்கள் பூப்பதில் சில ஆண்டுகள் தாமதம் ஏற்படலாம். மற்றபடி இவை குறிஞ்சி மலர்களை சேர்ந்த இனமாக உள்ளது என தாவரவியலாளர்கள் தெரிவித்தனர்.

தற்போது கொடைக்கானல் மலைப்பகுதியில் சிறு குறிஞ்சி மலர்கள் நீலம், வெள்ளை நிறங்களில் பூத்துக் குலுங்கின்றன. சுற்றுலாப் பயணிகள் இவற்றை கண்டு ரசிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us