ADDED : ஜூன் 23, 2025 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : வேலாயுதம்பாளையம் ஊராட்சி பண்ணமலை பகுதி மலைகளில் பெய்யும் மழை நீர் ஊற்றாக்கரை குளத்தில் சேரும்.
இக்குளம் நிரம்பி மறுகால் பாயும் நீரும், வழியிடை விளைநிலங்களில் சேகரமாகும் மழை நீருடன் சேர்ந்து சிற்றோடையாக மாறி மொட்டணம்பட்டி, நந்தவனப்பட்டி வழியே செங்குளத்துபட்டி அடுத்துள்ள செங்குளத்தை அடைகிறது.
இவற்றில் வடமதுரை பேரூராட்சிக்குட்பட்ட பகுதி ஓடை ஆக்கிரமிப்பால் மறைந்து கிடக்கிறது. இதனால் ஓடையில் வரும் நீர் செங்குளத்திற்கு செல்லாமல் அருகிலுள்ள விளை நிலங்களில் புகுந்து வேறு திசைகளில் பிரிந்து செல்கிறது. ஓடை நீர் பாய்வதால் இப்பகுதியிலுள்ள பலருடைய விளை நிலங்கள் பாதிப்பிற்குள்ளாகிறது. ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றி வழித்தடத்தை மீட்க வேண்டும்.