sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கட்டியும் திறக்காத ரேஷன் கடை ; பழநி நகராட்சி 19 வது வார்டில் தொடரும் அவதி

/

கட்டியும் திறக்காத ரேஷன் கடை ; பழநி நகராட்சி 19 வது வார்டில் தொடரும் அவதி

கட்டியும் திறக்காத ரேஷன் கடை ; பழநி நகராட்சி 19 வது வார்டில் தொடரும் அவதி

கட்டியும் திறக்காத ரேஷன் கடை ; பழநி நகராட்சி 19 வது வார்டில் தொடரும் அவதி

1


ADDED : அக் 10, 2024 05:18 AM

Google News

ADDED : அக் 10, 2024 05:18 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி : கட்டியும் திருக்காத ரேஷன் கடை ,நெரிசலால் தினம் தினம் தவிப்பு என பழநி நகராட்சி 19 வது வார்டு மக்கள் பரிதவிக்கின்றனர்.

சிவகுரு தெரு, தியாகி குமரன் தெரு, சுப்ரமணியபுரம் ரோடு, பழைய தாராபுரம் ரோடு, காமராஜர் தெரு, தேவாங்கர் தெரு பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் காந்தி மார்க்கெட் பகுதி கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலைகள் சேதமடைந்துள்ளதால் மக்கள் பரிதவிக்கின்றனர். கொசுத்தொல்லையும் உள்ளது. கச்சேரி புது தெருவில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது. ராஜாஜி சாலையில் கனரக வாகன நேர கட்டுப்பாட்டை அறிவித்தால் போக்குவரத்து நெரிசல் குறையும்.

கடை கட்டியும் திறக்கல


அபிராமி, குடும்பத் தலைவி : பல ஆண்டுகளாக ரேஷன் கடை வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. புதிய கடை கட்டும் பணியும் நிறைவு பெற்றுள்ளது. இருந்தும் திறக்கப்படாமல் உள்ளது. சொந்த கட்டடத்தில் ரேஷன் கடை இயக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாய் தொல்லை அதிகம்


மனோகரன், எல்.ஐ.சி., முகவர்: நகரில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றினால் நகரில் சுகாதாரம் ஏற்படும். முக்கிய சாலைகளை இணைக்கும் பகுதியாக இந்த வார்டு உள்ளது. இங்கு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாய் தொல்லை அதிகம் உள்ளது.

தேவை கண்காணிப்பு கேமரா


சுதாகர், வியாபாரி : வெளிநபர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த கண்காணிப்பு கேமராவை அதிகப்படுத்த வேண்டும். போலீசார் ரோந்து பணியையும் தீவிர படுத்த வேண்டும். மழைக்காலம் வர உள்ளதால் சுகாதாரப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

கொசு மருந்து அடிக்கிறோம்


காளீஸ்வரி ,கவுன்சிலர், (தி.மு.க.,) : வார்டில் குப்பையை அடிக்கடி அகற்றி விடுகிறோம். புதிய ரேஷன் கடை திறக்க எம்.எல்.ஏ., நடவடிக்கை எடுப்பார். நாய்களை கட்டுப்படுத்தவும், பாதாள சாக்கடை திட்டம் விரைவில் செயல்படுத்தவும் நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். கொசு மருந்து தொடர்ந்து அடிக்கப்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க சாக்கடைகள்துார்வாரப்பட்டுள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us