sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நான்கு வழிச்சாலையாகியும் இரு வழிச்சாலைபோல் ரோடு

/

நான்கு வழிச்சாலையாகியும் இரு வழிச்சாலைபோல் ரோடு

நான்கு வழிச்சாலையாகியும் இரு வழிச்சாலைபோல் ரோடு

நான்கு வழிச்சாலையாகியும் இரு வழிச்சாலைபோல் ரோடு


ADDED : ஜூன் 20, 2025 03:33 AM

Google News

ADDED : ஜூன் 20, 2025 03:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்:கோவிலுார் கரூர் நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக அமைக்கப்பட்ட நிலையில் கோவிலுார் கடைவீதி உள்ளிட்ட இடைப்பட்ட இடங்களில் இரு வழி சாலைபோல் ரோடு உள்ளதால் போக்கு வரத்து நெருக்கடியால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

திண்டுக்கல் கோவிலுார் கரூர் நெடுஞ்சாலை இருவழி சாலையாக இருந்த நிலையில் இரு ஆண்டுகளுக்கு முன் தொட்டனம்பட்டி முதல் எரியோடு, கோவிலுார், குஜிலியம்பாறை வழியாக டி.கூடலுார் வரை நான்கு வழி சாலையாக அமைக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் இன்னும் பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் முறையாக மாற்றி அமைக்கப்படவில்லை. ரோடு அருகிலே மின் கம்பங்கள் தொடர்ந்து வரிசையாக உள்ளன. கோவிலுாரின் மையப் பகுதியில் திண்டுக்கல் கரூர் மெயின் ரோடு செல்கிறது. இந்த இடத்தில் ஆயிரம் மீட்டர் துாரத்திற்கு இரு வழி சாலையை நான்கு வழி சாலையாக மாற்றாமல் அப்படியே ரோடை அமைத்துள்ளனர். இதில் டிவைடரை வளைத்து கட்டி உள்ளனர். இந்த ரோட்டில் வரும் வாகனங்கள் கோவிலுார் மையப் பகுதியை கடந்து செல்வதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. வேடசந்தூர் கரூர் நெடுஞ்சாலையில் செல்ல வேண்டிய வாகனங்கள் ஆண்டிபட்டி அருகே டோல்கேட் கட்டணம் வசூல் செய்வதால் பெரும்பாலான வாகனங்கள் திண்டுக்கல் கோவிலுார் கரூர் வழித்தடத்தில் பயணிக்கின்றன.இதனால் கடும் போக்குவரத்திற்கு வாகன ஓட்டிகள் ஆளாகின்றனர். காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் சிரமத்திற்கு ஆளாகினர். இப்பகுதி மக்களின் நலன் கருதி கோவிலுார் மையப் பகுதியில் உள்ள ரோடை முறைப்படி நான்குவழிச்சாலையாக அகலப்படுத்த வேண்டும். வளைந்தப்படி உள்ள டிவைடரை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. ரோட்டை முறையாக அகலப்படுத்தி விட்டு டிவைடரை அமைத்து கொள்ளட்டும் என்கின்றனர் பொதுமக்கள்.

முறையாக மூட வேண்டும்


ஏ.ராகேஷ், அன்னை ஆட்டோ ஒர்க்ஸ், கோவிலுார்: தொட்டனம்பட்டியில் இருந்து டி.கூடலுார் வரை இருவழிச் சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றி அமைக்கப்பட்ட நிலையில் சாலையோர மின் கம்பங்களை முறையாக மாற்றி அமைக்கவில்லை. கோவிலுார் நகர் பகுதியில் இருந்து அரசு நடுநிலைப்பள்ளி வரை உள்ள டிவைடரை அப்புறப்படுத்த வேண்டும். அப்போதுதான் முறையான போக்குவரத்து வசதி கிடைக்கும் இதேபோல் கோவிலுார் மாரியம்மன் கோயில் எதிரில் காவிரி குடிநீர் குழாய்க்காக பள்ளம் பறித்து போட்டுள்ளனர். அந்த பள்ளத்தை முறையாக மூட வேண்டும்.

போக்குவரத்து நெருக்கடி


வி.தர்மர், சமூக ஆர்வலர், ஆர்.கோம்பை: தொட்டனம்பட்டியிலிருந்து டி.கூடலுார் வரை இருந்த இருவழி சாலை, நான்கு வழிச்சாலையாக மாற்றி அமைக்கப்பட்டது. இடையில் உள்ள கோவிலுார் நகர் பகுதிக்குள் மட்டும் இருவழிச் சாலை அப்படியே உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெருக்கடிக்கு ஆளாகின்றனர். காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் நெருக்கடிக்கு ஆளாகின்றனர். இதை கருதி கோவிலுார் நகர பகுதிக்குள் ரோடை நான்கு வழி சாலையாக மாற்றவேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us