/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முருகன் கோயில்களில் தேய்பிறை சஷ்டி
/
முருகன் கோயில்களில் தேய்பிறை சஷ்டி
ADDED : டிச 22, 2024 07:40 AM

கன்னிவாடி : தருமத்துப்பட்டி அருகே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
பாலபிஷேகம் செய்து விசேஷ மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜை, மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், ரெட்டியார்சத்திரம் ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
நத்தம்: திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருக பெருமானுக்கு பால்,பழம்,பன்னீர், உள்ளிட்ட 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் தண்டபாணி சன்னதி , குட்டூர் உண்ணாமுலை அம்பாள் கோயிலில் உள்ள முருகப்பெருமான் சன்னதி , வேம்பார்பட்டி பாலமுருகன் கோயிலிலும் சஷ்டியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.