sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பயிற்சியாளர்களை கவனிக்க ஆள் இல்லை

/

பயிற்சியாளர்களை கவனிக்க ஆள் இல்லை

பயிற்சியாளர்களை கவனிக்க ஆள் இல்லை

பயிற்சியாளர்களை கவனிக்க ஆள் இல்லை


ADDED : பிப் 13, 2025 06:06 AM

Google News

ADDED : பிப் 13, 2025 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: அரசு விளையாட்டு விடுதிகளில் மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளர்களை வழி நடத்த ஆள் இல்லாமல் இருப்பதால் பள்ளிகளுக்கு இடையில் நடக்கும் போட்டிகளில் கூட மாணவர்களால் விளையாட முடியாமல் தடுமாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கட்டுப்பாட்டில் தமிழகம் முழுவதும் 30க்கு மேலான தங்கும் விளையாட்டு விடுதிகள் உள்ளன. இங்கு 12 வயதுக்கு மேற்பட்ட கபடி, புட்பால், வாலிபால் போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட மாணவர்கள் தங்கியிருந்து பயிற்சி பெறுகின்றனர். அவர்களுக்கு தினமும் அரசு தரப்பில் 1 நபருக்கு ரூ.250 செலவு தொகையாக வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக அங்கேயே பயிற்சியாளர்கள் உள்ளனர்.

இவர்கள் முறையாக தங்கியிருக்கும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்காமல் இருப்பதால் பள்ளிகளுக்கு இடையில் நடக்கும் சிறியளவிலான போட்டிகளிலும் விடுதி மாணவர்களால் வெற்றி பெறமுடியவில்லை. இதனால் அரசு நிதி ரூ.கோடிக்கணக்கில் வீணடிக்கப்படுகிறது. பயிற்சியாளர்கள் மாணவர்களுக்கு முறையாக பயிற்சி கொடுக்கிறார்களா இல்லையா என்பதை கண்காணிக்க அவர்களுக்கு மேல் இயக்குநர்கள், மேல் அதிகாரிகள் இல்லாமல் உள்ளனர். இதனால் பல இடங்களில் முறைகேடுகளும் நடக்கிறது.

விளையாட்டுத்துறையில் செயல்படுத்தப்படும் நல்லதிட்டங்கள் முறையாக சேராமல் உள்ளதாக விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us