/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
' கொடை' யில் குவிந்த சுற்றுலா பயணிகள்
/
' கொடை' யில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ADDED : ஆக 04, 2025 12:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்; வார விடுமுறையான நேற்று கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் முகாமிட்டனர்.
பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வனச் சுற்றுலா தலங்கள், கோக்கர்ஸ்வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளை கண்டு ரசித்தனர். ஏரி சாலையில் சைக்கிள், குதிரை சவாரி, ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
அவ்வப்போது தரையிறங்கும் மேகக் கூட்டம், சூறைக்காற்று என ரம்யமான சூழல் நிலவியது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது. இருதினங்களாக தொடர்ந்து மதியம் மிதமான மழை பெய்து மலை நகர் குளிர்ந்தது.

