ADDED : ஆக 17, 2026 07:22 PM
அ நிறம் | அளவு
சித்தையன்கோட்டை: சேடபட்டியில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு சார்பில், மரக்கன்று நடும் விழா நடந்தது.
தன்னார்வலர்கள் சுந்தர், அய்யனவேல், லட்சுமணமணிகண்டன் முன்னிலை வகித்தனர். அக்கரைப்பட்டி சடையாண்டி கோயில், சேடபட்டி பகவதி அம்மன் கோயில் பூஞ்சோலை வளாகம் உள்ளிட்ட இடங்களில் 150க்கும் மேற்பட்ட இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. தன்னார்வலர்கள் முத்துச்சாமி, முருகன், சின்னமணி, சரவணன் மரங்களின் அவசியம், இயற்கை வளங்களை பாதுகாத்தல், பசுமை பரப்பை அதிகரித்தல், காற்று மாசு கட்டுப்படுத்தலில் மரங்களின் பங்கு குறித்து விளக்கிப் பேசினர்.
-
