/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு ஆயுள்
/
சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு ஆயுள்
ADDED : செப் 21, 2024 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு திண்டுக்கல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
திண்டுக்கல் கோவில்பட்டி கூலித்தொழிலாளி பாண்டிசெல்வம்26. இவர் 2023ல் 16 வயது சிறுமியை காதலித்தார்.
சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரில் நத்தம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பாண்டிசெல்வத்தை கைது செய்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி வேல்முருகன், குற்றவாளி பாண்டிசெல்வத்திற்கு ஆயுள் தண்டனை, ரூ.55 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.