/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சீரமைக்காத ரோடுகள், எங்கும் இல்லை சாக்கடை ஒட்டன்சத்திரம் 18-வது வார்டு மக்கள் அவதி
/
சீரமைக்காத ரோடுகள், எங்கும் இல்லை சாக்கடை ஒட்டன்சத்திரம் 18-வது வார்டு மக்கள் அவதி
சீரமைக்காத ரோடுகள், எங்கும் இல்லை சாக்கடை ஒட்டன்சத்திரம் 18-வது வார்டு மக்கள் அவதி
சீரமைக்காத ரோடுகள், எங்கும் இல்லை சாக்கடை ஒட்டன்சத்திரம் 18-வது வார்டு மக்கள் அவதி
ADDED : ஆக 23, 2025 05:44 AM

ஒட்டன்சத்திரம்: விரிவாக்கப் பகுதிகளில் சாக்கடை வசதி இல்லாமலும், சீரமைக்கப்படாத ரோடுகளாலும் ஒட்டன்சத்திரம் நகராட்சி 18 வது வார்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.
திடீர் நகர், வள்ளுவர் நகர், காவேரி நகர், ஏ. எம். கே.நகர், வண்ணாம்பாறை, கருப்பணபுரம், காந்தி நகர் கிழக்கு பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் ஏ.எம்.கே. நகர், காவிரி நகர் பகுதியில் சாக்கடை முற்றுப்பெறாமல் இருப்பதால் கழிவு நீர் தேங்கி உள்ளது. திடீர் நகர் பகுதியில் சாக்கடைகள் அமைத்து பல ஆண்டுகளுக்கு மேலாவதால் சிதிலமடைந்து காணப்படுகிறது.
இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விரிவாக்க பகுதிகளில் சாக்கடை, தெரு விளக்கு உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த வேண்டும். குடிநீர் தேவையான அளவுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. மக்களின் கோரிக்கையை ஏற்று ரேஷன் கடைகள் பிரிக்கப்பட்டுள்ளது. குடிநீர் குழாய்களுக்காக தோண்டப்பட்ட ரோடுகள் சீரமைக்கப்படாமல் உள்ளது. ஒட்டன்சத்திரம் - கோவை ரயில் பாதையை கடப்பதற்கு ரயில்வே ஸ்டேஷனை ஒட்டிய பகுதியில் சுரங்கப்பாதை உள்ளது. இதையொட்டி ரயில்வே கேட்டும் உள்ளது. மழைக்காலத்தில் சுரங்கப்பாதையில் தேங்கும் தண்ணீரை மோட்டார் வைத்து அப்புறப்படுத்துகின்றனர். இதே பகுதியில் செல்லும் வடிகாலை அகலப்படுத்த வேண்டும். வார்டுக்குள் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.
மெதுவாக வரும் குடிநீர் காளீஸ்வரன்,ஆட்டோ டிரைவர், திடீர் நகர் : வார்டுக்குள் குடிநீர் தட்டுப்பாடு இல்லை. மேடான பகுதிகளில் உள்ள குழாய்களில் தண்ணீர் மெதுவாக வருவதால் பிடிப்பதற்கு தாமதம் ஆகிறது. இப்பகுதியில் தண்ணீர் வினியோகம் செய்யும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும். தெருக்களில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சாக்கடையை தூர்வாரி சுத்தம் செய்யப்படுகிறது. போதுமான அளவு தெருவிளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளது.
முற்றுப்பெறாத சாக்கடை கே.மகுடீஸ்வரன், மாவட்ட தலைவர், பா.ஜ., அரசு தொடர்பு பிரிவு: ரயில்வே கேட் பகுதியில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடந்து வருவதால் வாகனங்களை இயக்க சிரமம் ஏற்படுகிறது. திடீர் நகர் பகுதியில் சாக்கடையை சீரமைக்க வேண்டும். ஏ.எம்.கே.நகரில் குழாய்கள் அமைக்க தோண்டப்பட்ட பேவர் பிளாக் கற்கள் அப்படியே உள்ளது. இப்பகுதியில் முற்றுப் பெறாமல் சாக்கடை உள்ளது. இதேபோல் விரிவாக்க பகுதிகளிலும் சாக்கடையுடன் ் போதுமான தெரு விளக்குகள் அமைக்க வேண்டும்.
நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர் (தி.மு.க.,): தெரு ரோடுகள் அனைத்தும் சீரமைக்கப்படும். திடீர் நகர், வள்ளுவர் நகர், ஏ.எம்.கே.நகர் பகுதிகளில் நீண்ட காலமாக குடிநீர் வசதி கிடைக்காமல் இருந்து வந்தது. அமைச்சர் சக்கரபாணியிடம் கோரிக்கை வைத்ததின் பயனாக புதிய குழாய்கள் அமைத்து நல்ல குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும் கட்டப்பட்டுள்ளது. கழிவு நீர் ஓடை தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
சாக்கடைகள் தூர்வாரப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. குப்பை தினமும் அள்ளப்படுகிறது. வள்ளுவர் நகரில் வடிகால் வசதியுடன் கூடிய தார் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகள் பிரிக்கப்பட்டு புதிய கடைகள் கட்டப்பட்டுள்ளது. விரிவாக்கப் பகுதிகளில் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.