ADDED : நவ 25, 2025 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்,:நத்தத்தில் தேங்காய் மூடை ஏற்றுவோர், இறக்குவோர் பொதுநலச்சங்க பெயர் பலகை திறப்பு விழா நடந்தது. சங்க தலைவர் அய்யனார் தலைமை வகித்தார். செயலாளர் பாண்டி, பொருளாளர் முத்து, துணை தலைவர் பொன்னன், துணை செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், அ.தி.மு.க., ஜெ பேரவை இணை செயலாளர் கண்ணன் கலந்து கொண்டு அவுட்டர்,காந்திநகர் பகுதியில் உள்ள சங்க பெயர் பலகையை திறந்து வைத்தனர். நகர அவைத்தலைவர் சேக்ஒலி , தேங்காய் மூடை தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

