ADDED : டிச 22, 2025 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் லாரி மோதியதில், டூவீலரில் வந்த வாட்ச்மேன் பலியானார்.
வேடசந்துார், பாடியூர் பி.புதுப்பட்டியை சேர்ந்தவர் தர்மராஜ் 67. அங்குள்ள கூட்டுறவு வங்கியில் வாட்ச்மேனாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், டியூசன் படிக்க சென்றிருந்த பேரன்களை அழைத்து வர, திருச்சி- திண்டுக்கல் ரோட்டில் ரோட்டை கடக்க முயற்சித்துள்ளார். அப்போது, மணப்பாறை, மாலைமடைப்பட்டி லாரி ஓட்டுனர் பாலசுப்பிரமணியன் 45 ஓட்டிவந்த லாரி மோதியது.
திண்டுக்கல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டும் செல்லும் வழியில் உயிரிழந்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

