sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அங்கன்வாடிகள் போல் ஊராட்சி காலியிடம் நிரப்ப நல்ல காலம் பிறக்குமா: குடிநீர் சப்ளை,துாய்மை பணிகளில் அதிக தொய்வு

/

அங்கன்வாடிகள் போல் ஊராட்சி காலியிடம் நிரப்ப நல்ல காலம் பிறக்குமா: குடிநீர் சப்ளை,துாய்மை பணிகளில் அதிக தொய்வு

அங்கன்வாடிகள் போல் ஊராட்சி காலியிடம் நிரப்ப நல்ல காலம் பிறக்குமா: குடிநீர் சப்ளை,துாய்மை பணிகளில் அதிக தொய்வு

அங்கன்வாடிகள் போல் ஊராட்சி காலியிடம் நிரப்ப நல்ல காலம் பிறக்குமா: குடிநீர் சப்ளை,துாய்மை பணிகளில் அதிக தொய்வு


ADDED : ஜூன் 18, 2025 04:29 AM

Google News

ADDED : ஜூன் 18, 2025 04:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊராட்சி ஒன்றியங்களின் பணி என்பது ஊராட்சி நிர்வாகங்களை கண்காணித்து வேலை வாங்குவது, திட்ட பணிகளை தேர்வு செய்து டெண்டர் விட்டு ஒப்பந்தகாரர்கள் மூலம் பணிகளை செய்யவிட்டு சரிபார்ப்பது, பில் தொகை வழங்குவது, திட்டங்களை ஊராட்சிகளிடம் ஒப்படைப்பது, சிலவற்றை தங்களே பராமரிப்பது என்பது போன்ற மேலோண்மை பணியாக உள்ளது.

இவற்றிற்கு அடுத்ததாகவும், கடைசியாகவும் இருப்பது ஊராட்சிகள். இவைகளே மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டிய முக்கிய பொறுப்பில் உள்ளன.

குறிப்பாக குடிநீர் சப்ளை, துாய்மை பணிகளை உறுதி செய்வது இவற்றின் முக்கிய பொறுப்பாகும். இங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சூழ்நிலையில் முழு நிர்வாக பொறுப்பும் அந்த ஊராட்சியின் செயலாளரை சேரும். மக்கள் பிரதிநிதிகள் பதவியில் இல்லாத நேரத்தில் பி.டி.ஓ.,க்கள், ஊராட்சி செயலாளர்கள் மூலமே நிர்வாக பொறுப்பை கவனிக்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளமான ஊராட்சிகளில் செயலாளர் பணியிடம் காலியாகஉள்ளது.

பணி ஓய்வு, இறப்பு காரணங்களால் காலியான மேல்நிலை நீர்தொட்டி இயக்குபவர்கள் பணியிடங்கள் 22 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. துாய்மை பணியாளர் காலி பணியிடங்களும் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது. ஊராட்சிகளில் தினக்கூலி அடிப்படையில் பணியாட்களை நியமித்து பணிகளை செய்யும் நிலை உள்ளது. பணியில் ஏதாவது சிக்கல், அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கான தீர்வு காண்பதும் சவாலான விஷயமாக மாறிவிடுகிறது. எனவே காலி பணியிடங்களை விரைவில் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us