sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மின்தடை குழப்பங்களை தவிர்க்க உஷாராகுமா மின்வாரியம்

/

மின்தடை குழப்பங்களை தவிர்க்க உஷாராகுமா மின்வாரியம்

மின்தடை குழப்பங்களை தவிர்க்க உஷாராகுமா மின்வாரியம்

மின்தடை குழப்பங்களை தவிர்க்க உஷாராகுமா மின்வாரியம்


ADDED : ஜன 02, 2025 05:39 AM

Google News

ADDED : ஜன 02, 2025 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: சட்டசபை கூட்டத்தொடர் ஜன.6ல் துவங்குவதால் பராமரிப்பு மின்தடை அறிவிப்புகள் விஷயத்தில் முன்கூட்டிய திட்டமிடலுடன் மின்வாரியம் செயல்பட வேண்டும்.

மின் நிலையங்களில் மாதந்தோறும் நடக்கும் பராமரிப்பு பணிக்காக ஒரு நாள் பகலில் மின் சப்ளையை நிறுத்துவது வழக்கம். இதற்காக முன்கூட்டியே தேதி முடிவு செய்யப்படுகிறது. ஆனால் சட்டசபை நடக்கும் நாட்களில் மின்தடை செய்வதை தவிர்ப்பது நீண்ட ஆண்டுகளாக அதிகாரப்பூர்வமற்ற வகை செயல்பாடாக மின் வாரியத்தில் உள்ளது.

சட்டசபை கூட்டம் டிச.9,10 ல் நடந்த நிலையில் அந்த தேதிகளில் பராமரிப்பு பணி மின்தடையை பல ஊர்களில் மின்வாரியம் வெளியிட்டது. இதை கருதி அன்று பல தொழிலகங்கள் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளித்தனர்.

ஆனால் சட்டசபை கூட்டத்தால் மின்தடையை ரத்து செய்து வழக்கம் போல்மின்சப்ளை வழங்கியது. தொழிலாளர்களுக்கு விடுமுறை அளித்திருந்ததால் தொழில்நிறுவனங்கள் செயல்படாது உற்பத்தி பாதித்தது. தற்போது ஜன.6 ல் துவங்கி சில நாட்கள் சட்டசபை கூட்டம் நடப்பதால் மின்தடை அறிவிப்பு விஷயத்தில் குழப்பம் இல்லாமல் திட்டமிடலுடன் மின்வாரியம் செயல்பட வேண்டும் என தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.






      Dinamalar
      Follow us