ADDED : மார் 17, 2026 06:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: வடமதுரை முத்தாலம்மன் கோயிலில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உற்ஸவ திருவிழா மார்ச் 8ல் சாற்றுடுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு கரகம் ஜோடித்து மின் அலங்கார ரதத்தில் ஊர்வலமாக கோயில் வந்தது.
நேற்று காலை பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் வழிபாடு நடந்தது.
மாலை முத்தாலம்மன் கோயில் முன் சிறப்பு பூஜைகள் செய்து மூன்று கழுமரங்கள் நடப்பட்டன. பாரம்பரிய உரிமை பெற்ற இளைஞர்கள் ஏறியதும் கோயில் வாசலில் படுகளம் அமைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இன்று மாலை அம்மன் பூஞ்சோலை செல்லுதலுடன் விழா நிறை வடைகிறது.

