ADDED : பிப் 26, 2024 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : வேடசந்துார் குருநாதநாயக்கனுார் ஊராட்சி கோவில்பட்டியை சேர்ந்த மைக்செட் ஆபரேட்டர் கருணாகரன்19. இவர் ஒரு விசேஷ நிகழ்ச்சிக்கு மைக்செட் அமைக்க தாடிக்கொம்பு பகுதிக்கு வந்தார். அங்கு 11ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை சந்தித்து பழகினார். இந்நிலையில் கருணகரன், மாணவியை காதலிப்பதாக கூறி தன்னோடு அழைத்து சென்றார். மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர்.
எஸ்.ஐ., பாண்டியன் இருவரையும் பிடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தார். மாணவி பெற்றோருடன் செல்கிறேன் எனக்கூறியதை தொடர்ந்து பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார். கருணாகரன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

