sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கீழ்பவானி பாசனத்துக்கு நீர் திறப்பு குறைப்பு

/

கீழ்பவானி பாசனத்துக்கு நீர் திறப்பு குறைப்பு

கீழ்பவானி பாசனத்துக்கு நீர் திறப்பு குறைப்பு

கீழ்பவானி பாசனத்துக்கு நீர் திறப்பு குறைப்பு


ADDED : பிப் 20, 2025 01:49 AM

Google News

ADDED : பிப் 20, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழ்பவானி பாசனத்துக்கு நீர் திறப்பு குறைப்பு

புன்செய்புளியம்பட்டி:பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு, 2,300 கன அடியில் இருந்து, 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணை, 105 அடி உயரம்; 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு, கீழ்பவானி வாய்க்காலில் ஐந்து சுற்றுக்களாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில், 2,300 கன அடி நீர் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் முதல், கீழ்பவானி வாய்க்காலில் நீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு, நேற்று மாலை, 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

அதேசமயம், அரக்கன் கோட்டை - தடப்பள்ளி பாசனத்துக்கு, 800 கன அடி தண்ணீர், காளிங்கராயன் பாசனத்துக்கு, 200 கனஅடி நீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டது. நேற்று மாலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர் மட்டம், 88.60அடி, நீர் இருப்பு, 20.6 டி.எம்.சி.,யாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு, 433 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.






      Dinamalar
      Follow us