/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தனியார் மருத்துவமனையில் தகராறுதாக்கப்பட்டவர் சாவு; தாய் புகார்
/
தனியார் மருத்துவமனையில் தகராறுதாக்கப்பட்டவர் சாவு; தாய் புகார்
தனியார் மருத்துவமனையில் தகராறுதாக்கப்பட்டவர் சாவு; தாய் புகார்
தனியார் மருத்துவமனையில் தகராறுதாக்கப்பட்டவர் சாவு; தாய் புகார்
ADDED : பிப் 26, 2025 01:13 AM
தனியார் மருத்துவமனையில் தகராறுதாக்கப்பட்டவர் சாவு; தாய் புகார்
பவானி:பவானி அருகேயுள்ள சித்தாரை சேர்ந்தவர் மூர்த்தி, 32; கூலி தொழிலாளி. மூர்த்தியின் மனைவி அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்துள்ளார்.
சம்பள பாக்கி இருந்ததால், தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சதீஸ்குமார், 26, என்பவருடன் மருத்துவமனைக்கு சென்று டாக்டர் மோகன்குமாரிடம், பணம் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாய் தகராறில், டாக்டர் மோகன்குமாரின் உறவினர்கள் இருவரையும் தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து சதீஸ்குமார் அளித்த புகாரின்படி, டாக்டர் மோகன்குமார் மற்றும் உறவினர்கள் நான்கு பேர் மீது, பவானி போலீசார் வழக்கும் பதிவு செய்தனர்.
இதனிடையே காயமடைந்த சதீஸ்குமார், ஈரோடு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, 12ம் தேதி வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் சதீஸ்குமார் மயங்கி விழுந்தார்.
அங்குள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்து, ஈரோடு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை இறந்தார்.
டாக்டரின் உறவினர்கள் தாக்கியதால், சதீஸ்குமார் இறந்து விட்டதாக, அவரது தாய் பழனியம்மாள் கொடுத்த புகாரின்படி, பவானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.