ADDED : மார் 06, 2025 01:35 AM
மாணவர் - மகளிர் விடுதிகள் பதிவு
திருப்பூர்:-திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் மகளிர் விடுதிகள், 137 விடுதிகள் மட்டுமே பதிவு செய்துள்ளன. பள்ளி, கல்லுாரி, பணிபுரியும் மகளிர் விடுதிகள் அனைத்தும் பதிவு செய்து, உரிமம் பெற்றபிறகே செயல்பட வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அறக்கட்டளை பதிவு பத்திரம், சொந்த கட்டடம் அல்லது வாடகை எனில் அதற்கான ஒப்பந்த பத்திரம், கட்டட வரைபடம், கட்டட உறுதிச் சான்று, தீயணைப்பு துறையின் தடையின்மை சான்று, சுகாதார சான்று ஆகியவற்றுடன், http://tnswp.com என்கிற ஆன்லைன் போர்ட்டலில் பதிவு செய்யவேண்டும். விடுதி நிர்வாகிகள் தங்கள் விடுதி மற்றும் இல்லங்களை, வரும் 20ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்யவேண்டும்; முறையாக பதிவு செய்யாத விடுதிகளின் நிர்வாகிகள், மேலாளர்கள் மீது போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 2 ஆண்டுகள் வரை சிறைதண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் வரை அபுராதமும் விதிக்கப்படும் என, மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.