sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நோய் தாக்குதலால் தேங்காய் விளைச்சல் பாதிப்புகொப்பரை கிலோ ரூ.170க்கு மேல் விற்பனை

/

நோய் தாக்குதலால் தேங்காய் விளைச்சல் பாதிப்புகொப்பரை கிலோ ரூ.170க்கு மேல் விற்பனை

நோய் தாக்குதலால் தேங்காய் விளைச்சல் பாதிப்புகொப்பரை கிலோ ரூ.170க்கு மேல் விற்பனை

நோய் தாக்குதலால் தேங்காய் விளைச்சல் பாதிப்புகொப்பரை கிலோ ரூ.170க்கு மேல் விற்பனை


ADDED : மார் 20, 2025 01:54 AM

Google News

ADDED : மார் 20, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நோய் தாக்குதலால் தேங்காய் விளைச்சல் பாதிப்புகொப்பரை கிலோ ரூ.170க்கு மேல் விற்பனை

ஈரோடு:கடும் வெயில், நோய் தாக்குதலை கட்டுப்படுத்த தோட்டக்கலை துறை நடவடிக்கை எடுக்காததால், கொப்பரை தேங்காய் விலை கிலோ, 170 ரூபாயை கடந்து விற்பனையாகிறது.

தமிழகம், கேரளாவில் அதிகளவில் தென்னை மரங்கள் உள்ளதால், தேங்காய், கொப்பரை தேங்காய் உற்பத்தி அதிகம் உள்ளது. கடந்த ஓராண்டாக, தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதலால் காய் பிடித்தல் குறைந்து, கொப்பரை தேங்காய் உற்பத்தி சரிந்து, 8 மாதத்துக்கு மேலாக, 100 முதல், 170 ரூபாய் வரை விற்பனையாகிறது.

இது குறித்து, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி கூறியதாவது:தற்போது வரை வெயில் கடுமையாகவே தொடர்வதால், வரும் ஆண்டிலும் விளைச்சல் குறைந்து, விலை உயரும். அமெரிக்காவில் இருந்து வந்த ரூகோஸ் வெள்ளை ஈ, தேசிய அளவில் அனைத்து இடங்களிலும் தென்னையை தாக்கி, பூவை அழித்து, காய் பிடிப்பை தடுக்கிறது. மட்டைகளின் மேல்புறம் கருப்பாகவும், கீழ்புறம் வெள்ளையாக்கி, வளர்ச்சியை தடுக்கிறது. இதனை பூச்சி கொல்லி மருந்து அடித்து தடுக்க இயலாது. விளக்குபொறி வைத்தும், தண்ணீரை பீய'்ச்சி அடித்தும், விளக்கெண்ணெய் தடவிய மஞ்சள் நிற அட்டையை வைத்தும், வேப்ப எண்ணெயை தண்ணீரில் கலந்து பீய்ச்சி அடித்தும் கட்டுப்படுத்தலாம்.

தற்போது அதற்கும் இப்பூச்சிகள் கட்டுப்படவில்லை. தோட்டக்கலை துறை, வேளாண் துறையினரும் இதில் அக்கரை காட்டவில்லை. இவற்றை எதிர் பூச்சிகள், இவற்றை உண்ணும் பூச்சிகள் மூலமே கட்டுப்

படுத்த முடியும்.கடந்தாண்டு இதே மார்ச், 19ல் ஒரு கிலோ கொப்பரை தேங்காய், 65 முதல், 80 ரூபாய்க்கு விற்றது. நேற்று மொடக்குறிச்சியில் ஒரு கிலோ, 160.79 முதல், 171.79 ரூபாய் வரையிலும், பெருந்துறையில், 140.38 முதல், 170.18 ரூபாய் வரையிலும் விற்பனையானது. தற்போது ஒரு கிலோ தேங்காய், 30 முதல், 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால், 100 ரூபாயாக விலை அதிகரிக்கும். ஒரு இளநீர், 100

ரூபாயை தாண்டும். இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us