sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சென்னிமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் பாலாபிஷேக விழா

/

சென்னிமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் பாலாபிஷேக விழா

சென்னிமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் பாலாபிஷேக விழா

சென்னிமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் பாலாபிஷேக விழா


ADDED : ஆக 13, 2024 05:52 AM

Google News

ADDED : ஆக 13, 2024 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமிக்கு, சென்னிமலை கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளர் சங்கம் சார்பாக, 57ம் ஆண்டு பாலபிஷேக பெருவிழா நேற்று நடந்தது.

இதற்காக காலை, 8:10 மணிக்கு, 1,280 திருப்பாற் குடங்கள் கைலாசநாதர் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது. மேள-தாளம் முழங்க நான்கு ராஜவீதிகளிலும் வலம் வந்து, படிக்கட்டுகள் வழியாக மலை கோவிலை ஊர்வலம் அடைந்தது. காலை, 10:40 மணிக்கு பாலாபிஷேகம் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

இந்தாண்டு வழக்கத்துக்கு மாறாக பெண்கள், அதிக அளவில் பால் குடம் எடுத்து வந்தனர். பாலாபிஷேகத்தை தொடர்ந்து சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பிறகு உற்சவ மூர்த்தி பிரகார உலாக்காட்சி நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளர் சங்க நிர்வாகிகள் செய்தனர்.






      Dinamalar
      Follow us