sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நிபந்தனை பட்டா முடக்கம் ரத்து செய்யக்கோரி மனு

/

நிபந்தனை பட்டா முடக்கம் ரத்து செய்யக்கோரி மனு

நிபந்தனை பட்டா முடக்கம் ரத்து செய்யக்கோரி மனு

நிபந்தனை பட்டா முடக்கம் ரத்து செய்யக்கோரி மனு


ADDED : ஜூலை 02, 2024 06:32 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : நிபந்தனை பட்டா நிலங்களை வாங்கியவர்களின் பட்டா முடக்-கத்தை ரத்து செய்யக்கோரி, ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்க-ராவிடம், முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் தலைமையில் நேற்று மனு வழங்கினர்.

பின் வெங்கடாசலம் கூறியதாவது: பெருந்துறை மருத்துவ கல்-லுாரி, சிலேட்டர் நகர் அருகே தமிழ் நகர் பகுதியில், 1922, 1940, 1942ல் கிறிஸ்தவ மதம் மாறும் ஆதிதிராவிடர்களுக்கு ஆங்கி-லேய அரசு, நிபந்தனை பட்டாவாக வழங்கியது. அந்நிலத்தை அச்சமுதாயத்தினர் தவிர, பிறருக்கு விற்கக்கூடாது. ஆனால், 30 ஆண்டுகளுக்குள் இவ்விடங்களை, 2, 3 சென்ட்களாக பல்வேறு தரப்பினர் வாங்கி வீடு கட்டி, மின் மற்றும் குடிநீர் இணைப்பு, சாலை வசதி உள்ளிட்ட அனைத்தும் பெற்றனர். எனது முயற்-சியால் இவர்களுக்கு முறையாக பட்டா பெறப்பட்டது. இந்நி-லையில் அந்த இடங்களில் ஏக்கர் கணக்கில் சிலர் நிலம் வாங்-கினர். இவர்கள் மற்றவர்களை காரணம் காட்டி பட்டா பெற்று-விட்டனர்.

சில அரசியல் காரணம், பழிவாங்கும் செயலுக்காக பட்டாவை ரத்து செய்ய முயன்று கடந்த, 2020 செப்., மாதம் அப்போதைய கலெக்டர், குறைந்த நிலம், அதிக நிலம் என வாங்கிய அனைவ-ரது பட்டாவையும் ரத்து செய்து விட்டார். இதனால் அங்கு வீடு கட்டி, 30 ஆண்டாக வசிப்போர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த உத்தரவை ரத்து செய்து, பட்டா கிடைக்க வழி செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us