sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கடை, வாடகை பிரச்னை தீர்க்க வழிகாட்டுதல் குழு

/

கடை, வாடகை பிரச்னை தீர்க்க வழிகாட்டுதல் குழு

கடை, வாடகை பிரச்னை தீர்க்க வழிகாட்டுதல் குழு

கடை, வாடகை பிரச்னை தீர்க்க வழிகாட்டுதல் குழு


ADDED : ஆக 31, 2024 01:49 AM

Google News

ADDED : ஆக 31, 2024 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு மாநகராட்சி, குடிநீர் வழங்கல்துறை அமைப்புகளுக்கு சொந்தமான, கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் நிலவும் வாடகை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை தீர்க்கும் வகையில், வழிகாட்டுதல் குழு

அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு முதன்மை செயலர் கார்த்திகேயன் விடுத்துள்ள சுற்றறிக்கை:இந்த வழிகாட்டு குழுவில், மாநகராட்சி செயற்பொறியாளர் (பணிகள்), உதவி ஆணையாளர் (வருவாய்), வருவாய் அலுவலர், உதவி வருவாய் அலுவலர் இடம் பெறுவர்.இக்குழுவினர் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு சொந்தமான நிலங்கள், கட்டடங்களுக்கான குத்தகை இனங்களுக்கு நியாய-மான வாடகை, இடத்துக்கேற்ற முன்வைப்புத் தொகை நிர்ணயம், வருவாய் ஈட்டும் சொத்துகளை ஏலம்

விடுவது குறித்த வழி-முறை வகுப்பது, குத்தகை, வாடகை மறு நிர்ணயம் செய்தலுக்கு கால இடைவெளி நிர்ணயிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்-கொள்வர். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

பேப்பர் கப்பில் டீ வினியோகம்மாநகராட்சியில் பேப்பர் கப் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் கேன்சர் பாதிப்பு அதிகரித்து வருவதாக, மாமன்ற கூட்டத்தில், பிரகாஷ் எம்.பி., நேற்று வருத்தம் தெரிவித்து பேசினார். அப்-போது, கவுன்சிலர்கள், அதிகாரிகள்,

நிருபர்களுக்கு, மாநகராட்சி சார்பில் ஆபத்தை விளைவிக்கும் பேப்பர் கப்பில் டீ வழங்கப்-பட்டது.இது போன்ற பேப்பர் கப்களில் சூடாக டீ, காபி குடிக்கும்-போது, அதிலுள்ள மெழுகு கரைந்து, கல்லீரல் பாதிப்பு, மஞ்சள் காமாலை, அல்சர், குடல் புற்றுநோயை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம். இது கமிஷனரும், டாக்டருமான

மனிஷ், மாநகர நல அலுவலர் பிரகாஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர்களுக்கு தெரி-யாதா? என்று கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.






      Dinamalar
      Follow us