/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கணக்கம்பாளையத்தில் கும்பாபிஷேக விழா
/
கணக்கம்பாளையத்தில் கும்பாபிஷேக விழா
ADDED : ஆக 31, 2024 01:49 AM
டி.என்.பாளையம்: டி.என்.பாளையம் அருகே கணக்கம்பாளையத்தில் ஊர் விநா-யகர் மற்றும் ஸ்ரீசக்தி மாரியம்மன் கோவிலில் ஹா கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது. முன்னதாக கடந்த, 19ல் யாக-சாலை கால்கோள் விழா, 22ல்
யாகசாலை நிகழ்வு தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு முதல் கால பூஜை, நேற்று அதிகாலை இரண்டாம் கால பூஜை, மூலமந்திர யாக வேள்வி உள்ளிட்டவை நடந்தது. காலை, 9:00 மணிக்கு விமான கோபுர
கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.ஜவுளி வியாபாரி மாயம்ஈரோடு: ஈரோடு, 46 புதுார், நொச்சி நகரை சேர்ந்தவர் ஜமாலுதீன், 55; ஈரோட்டில் ஈஸ்வரன் கோவில் வீதியில், 15 ஆண்டுகளாக துணிக்-கடை நடத்தி வருகிறார். வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் மன வருத்தம் அடைந்தார். கடந்த,
25ல் வீட்டைவிட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி கதீஜா புகாரின்படி, ஈரோடு தாலுகா போலீசார், அவரை தேடி வருகின்றனர்.