sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தீரன் சின்னமலை நினைவு விழா 167 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

/

தீரன் சின்னமலை நினைவு விழா 167 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

தீரன் சின்னமலை நினைவு விழா 167 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

தீரன் சின்னமலை நினைவு விழா 167 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்


ADDED : ஆக 04, 2024 01:29 AM

Google News

ADDED : ஆக 04, 2024 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, அரச்சலுார் அருகே ஓடாநிலையில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு ஆடிப்பெருக்கு விழா நேற்று நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., சாந்தகுமார் வரவேற்றார். ஈரோடு எம்.பி., பிரகாஷ், எம்.எல்.ஏ.,க்கள் ஈரோடு கிழக்கு இளங்கோவன், அந்தியூர் வெங்கடாசலம், திருச்செங்கோடு ஈஸ்வரன் முன்னிலை வகித்தனர். வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, தீரன் சின்னமலை உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தீரன் சின்னமலையின் வாரிசுதாரர்கள் கv வுரவிக்கப்பட்டனர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், 121 பயனாளிகளுக்கு 2.49 கோடி ரூபாய் மதிப்பில் இ-பட்டா, 10 பயனாளிகளுக்கு நிறுத்தப்பட்ட நத்தம் பட்டாக்கள் மீண்டும் வழங்குவதற்கான ஆணையை அமைச்சர் வழங்கினார்.

அரசு இசைப்பள்ளி சார்பில், 30 பயனாளிகளுக்கு கலை சுடர்மணி, கலை வளர்மணி, கலை நன்மணி, கலை இளமணி, கலை முதுமணி விருதுகள் உட்பட, 167 பயனாளிகளுக்கு, 2.53 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. வளாகத்தில், 15க்கும் மேற்பட்ட துறைகள் சார்பில் அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. மாவட்ட கலை பண்பாட்டு துறை, அரசு இசைப்பள்ளி உட்பட மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், எஸ்.பி., ஜவகர், பயிற்சி உதவி கலெக்டர் ராமகிருஷ்ணசாமி உட்பட பலர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், சுதந்திர போராட்ட வீரர்களான குணாளன் நாடார், வல்வில் ஓரி ஆகியோர் நினைவிடங்களுக்கும் சென்று மரியாதை செலுத்தினர். பின், பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் தீரன் சின்னமலை உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.






      Dinamalar
      Follow us