ADDED : ஏப் 17, 2026 05:48 AM
அ நிறம் | அளவு
ஈரோடு :ஈரோடு எஸ்.கே.சி.ரோடு, மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பரிசளிப்பு, பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடந்தது. வட்டார கல்வி அலுவலர் சாந்தி, எல்.கே.ஜி., முதல் எட்டாம் வகுப்பு வரை கல்வியாண்டில் முதலிடம் பிடித்த மாணவ மாணவியர், 100 சதவீத வருகை
புரிந்த மாணவிகள், தனித்திறன் மிக்கோர், வட்டார, மாவட்ட கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கினார். நிகழ்வில் தலைமை ஆசிரியர் சுமதி, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
