/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொங்கு பாலிடெக்னிக் வாரிய தேர்வில் சாதனை
/
கொங்கு பாலிடெக்னிக் வாரிய தேர்வில் சாதனை
ADDED : பிப் 15, 2025 05:41 AM
பெருந்துறை: பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள், தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் சார்பில் நடந்த வாரிய தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்துள்-ளனர்.
சாதனை படைத்த மாணவர்களுக்கு கல்லுாரி தாளாளர் வெங்கடாச்சலம் பரிசு வழங்கி பாராட்டினார். அப்போது கல்-லுாரி முதல்வர் வேதகிரி ஈஸ்வரன் உடனிருந்தார்.மாநில அளவில், 700-க்கு 697 மதிப்பெண்கள் பெற்று மெக்ட்-ரானிக்ஸ் துறை ஸ்ரீராம் முதலிடம், சி.சி.என்.துறை ஹர்சினி, 696 எடுத்து இரண்டாமிடம், கணிபொறியியல் துறை சஞ்சித், 692 பெற்று மூன்றாமிடம் பெற்றனர். வேலை வாய்ப்பிலும் சாதனை படைத்துள்ளனர். வேலை வாய்ப்பு வேண்டி விண்ணப்பித்தோ-ருக்கு, 100 சதவீதம் வேலை வாய்ப்பு கிடைத்தது.
வாரியத் தேர்வில் அதிக மதிப்பெண் மற்றும் வேலை வாய்ப்பு பணியாணை பெற்ற மாணவ, மாணவியரை, கொங்கு வேளாளர் கல்வி அறக்கட்டளை தலைவர் குமாரசாமி, செயலாளர் சத்திய-மூர்த்தி, பொருளாளர் ரவிசங்கர், கல்லுாரி துணை முதல்வர் செந்-தில்குமார், துறை தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்-தினர்.

