/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விளையாட்டு விடுதியில் 85 மாணவியர் சேர்க்கை
/
விளையாட்டு விடுதியில் 85 மாணவியர் சேர்க்கை
ADDED : ஜூலை 19, 2024 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், பள்ளி மாணவ, மாணவியருக்கு, விளையாட்டு துறையில் சாதனை படைக்க ஏதுவாக பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உண-வுடன் கூடிய விளையாட்டு விடுதி மற்றும் விளையாட்டு பள்-ளிகள், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில்
உள்ளன.
அதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் மாணவியர் விளையாட்டு விடுதி செயல்பட்டு வருகிறது. நடப்பாண்டில் விடுதியில் சேருவ-தற்கான தேர்வு கடந்த மே மாதம் நடந்து. இதில் தேர்வான, 85 மாணவியர் விடுதியில் சேர்ந்துள்ளனர்.
இவர்களுக்கு கால்பந்து, வாலிபால், தடகள விளையாட்டுக்களில் பயிற்சி அளிக்கப்படும் என, மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ்குமார் தெரிவித்தார்.