sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நாட்டு துப்பாக்கியுடன்பழங்குற்றவாளி கைது

/

நாட்டு துப்பாக்கியுடன்பழங்குற்றவாளி கைது

நாட்டு துப்பாக்கியுடன்பழங்குற்றவாளி கைது

நாட்டு துப்பாக்கியுடன்பழங்குற்றவாளி கைது


ADDED : ஜூன் 23, 2024 02:43 AM

Google News

ADDED : ஜூன் 23, 2024 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:நாட்டு துப்பாக்கியுடன் திரிந்த பழங்குற்றவாளியை, நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் பிடித்து, பவானிசாகர் போலீசில் ஒப்படைத்தனர்.ஈரோடு மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், கொத்தமங்கலம் பரிசல் துறையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது நாட்டு துப்பாக்கியுடன் (சிங்கிள் பேரல்) ஒரு வாலிபர், வனப்பகுதிக்குள் நுழைய முற்பட்டார். அவரை பிடித்து விசாரித்ததில், சத்தியமங்கலம், ராஜன் நகர், புது குய்யனுாரை சேர்ந்த சின்னதுரை, 29, என தெரிந்தது. பவானிசாகர் போலீஸ் ஸ்டேஷனில் அவரை ஒப்படைத்தனர். விசாரணைக்குப் பின் கைது செய்த சின்னதுரையை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில் அடைத்தனர். சின்னதுரை மீது பவானிசாகர், கோவை போத்தனுார் போலீஸ் ஸ்டேஷனில் திருட்டு வழக்கு, கோபி மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷனில் கஞ்சா விற்றது உள்ளிட்ட ஏழு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us