ADDED : செப் 08, 2024 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
2,000 டன் நெல் வருகை
ஈரோடு, செப். 8-
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், ஈரோடு மாவட்ட பொது வினியோக திட்டத்துக்காக, தஞ்சாவூர் மாவட்ட பகுதியில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. 2,000 டன் நெல், தனி சரக்கு ரயிலில் ஈரோடு ரயில்வே கூட்ஸ் செட்டுக்கு நேற்று வந்தது. நுாற்றுக்கணக்கான லாரிகளில் ஏற்றி நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நெல் அரவை முகவர்களிடம் கொடுத்து அரிசியாக மாற்றப்பட்டு, மாவட்டத்தில் உள்ள பொது வினியோக திட்ட குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு வழங்கி, மக்களுக்கு வினியோகம் செய்யப்படும்.