/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாயக்கழிவால் பச்சை நிறமாக மாறிய காவிரி நீர்
/
சாயக்கழிவால் பச்சை நிறமாக மாறிய காவிரி நீர்
ADDED : ஏப் 25, 2024 05:13 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் பகுதியில், காவிரி ஆற்றில் சாயக்கழிவு நீர் நேரடியாக கலந்து வருவதால், தண்ணீர் பச்சை நிறமாக மாறி
குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
பள்ளிப்பாளையம் சுற்று வட்டார பகுதியில் ஏராள மான சாய ஆலைகள் செயல்படுகின்றன. இந்த சாய ஆலைகளில் இருந்து ரசாயனம் கலந்த கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக வெளியேற்றப்படுகிறது. அவை ஆற்றில் கலப்பதால் தண்ணீர் மாசடைகிறது. தற்போது, கோடைகாலம் என்பதால் குடிநீருக்கு மட்டும் தண்ணீர் ஆற்றில் வருகிறது. இந்த தண்ணீரில், சாயக்கழிவுநீர், குடியிருப்பு கழிவுநீர் அதிகளவு கலந்து வருகிறது.
இதனால் ஆற்று தண்ணீர் நிறம் மாறி பச்சை நிறத்தில் காணப்படுகிறது. ஆற்றில் குளிக்க வந்த மக்கள் தண்ணீரை பார்த்ததும் திரும்பி சென்று விட்டனர்.
அந்தளவுக்கு தண்ணீர் மோசமான நிலையில் காணப்படுகிறது. மீன் வளமும் பாதிக்கப்படுகிறது. இந்த தண்ணீரை எடுத்து சுத்திகரிக்கப்பட்டு மக்களுக்கு வினியோகம் செய்தாலும், பல்வேறு உடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
கோடைகாலம் என்பதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதால், ஆற்று தண்ணீரை தான் மக்கள் முழுமையாக நம்பி
உள்ளனர். ஆனால், சாயக்
கழிவுநீரால் ஆற்று தண்ணீர் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, நிறம் மாறிய ஆற்று தண்ணீர், குடிக்க உகந்ததா என, பரிசோதனை செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

