ADDED : மே 30, 2024 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே, நேற்று சங்கிலி கருப்பன் பண்டிகை உற்சாகமாக நடைபெற்றது. தாராபுரம், அலங்கியம் ரோடு பகுதியில் உள்ள சீத்தக்காடு சங்கிலி கருப்பன் கோவில் பண்டிகையை ஒட்டி, நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில் சாமி அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை, சங்கிலி கருப்பன் கோவிலில் விசேஷ பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
செய்தனர்.