sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

போலீசாரே போக்குவரத்துக்கு இடையூறு வாகனங்களை அப்புறப்படுத்த கோரிக்கை

/

போலீசாரே போக்குவரத்துக்கு இடையூறு வாகனங்களை அப்புறப்படுத்த கோரிக்கை

போலீசாரே போக்குவரத்துக்கு இடையூறு வாகனங்களை அப்புறப்படுத்த கோரிக்கை

போலீசாரே போக்குவரத்துக்கு இடையூறு வாகனங்களை அப்புறப்படுத்த கோரிக்கை


ADDED : ஆக 27, 2024 02:52 AM

Google News

ADDED : ஆக 27, 2024 02:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயம் போலீஸ் ஸ்டேஷன் அருகே ரவுண்டானா சிக்னல் உள்ளது. இதன் அருகருகே காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம், மகளிர் போலீஸ் ஸ்டேசன், யூனியன் அலுவலகம், நீதிமன்றம் என பல அரசு அலுவலகம் உள்ளது. இதனால் இப்ப-குதியில் எந்நேரமும் வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் இருக்கும்.

இந்நிலையில் விபத்தினால் சிக்கும் வாகனங்கள், வழக்குகளால் பறிமுதல் செய்யும் வாகனங்கள் என நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை, மக்கள் நடந்து செல்லும் பாதையை மறித்து, காங்-கோயம் போலீசார் பல மாதங்களாக நிறுத்தியுள்ளனர்.இதனால் தாராபுரம், காங்கேயம் ரோட்டில் வரும் வாகனங்கள், ரவுண்டானா பகுதி சிக்னலை, சிரமத்துடன் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலும், அவ்-வப்போது சிறு சிறு விபத்தும் நடக்கிறது. மக்களுக்கு உதாரண-மாக இருக்க வேண்டிய போலீசாரே, போக்குவரத்து மற்றும் மக்களுக்கு இடையூறாக இருப்பது, தெரியுமா அல்லது தெரி-யாதா? என்று, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us