sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தேர்தல் நிறைவு எதிரொலி: சந்தைக்கு மாடுகள் வரத்து உயர்வு

/

தேர்தல் நிறைவு எதிரொலி: சந்தைக்கு மாடுகள் வரத்து உயர்வு

தேர்தல் நிறைவு எதிரொலி: சந்தைக்கு மாடுகள் வரத்து உயர்வு

தேர்தல் நிறைவு எதிரொலி: சந்தைக்கு மாடுகள் வரத்து உயர்வு


ADDED : மே 16, 2024 11:52 PM

Google News

ADDED : மே 16, 2024 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு நேற்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 750க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

சில வாரங்களாக, 500 முதல் 650க்கும் குறைவான மாடுகளே வரத்தானதால், வியாபாரிகள் உற்சாகம் அடைந்தனர்.

சந்தை நிர்வாகிகள் கூறியதாவது:

நேற்று, 5,000 ரூபாய் முதல், 25,000 ரூபாய் வரையிலான விலையில், 50 கன்றுகள், 20,000 ரூபாய் முதல், 70,000 ரூபாய் மதிப்பில், 300 எருமை மாடுகள், 20,000 ரூபாய் முதல், 85,000 ரூபாய் மதிப்பில், 350 பசு மாடுகள், 80,000 ரூபாய்க்கு மேலான விலையில், 50க்கும் மேற்பட்ட கலப்பின மாடுகள் விற்பனைக்கு வந்தன.

முதல் கட்டத்தில் தமிழகத்தில் தேர்தல் நிறைவடைந்தாலும், தென் மாநிலங்களில் தேர்தல் நடந்ததால், பணத்தை எடுத்து வரவும், மாடுகளை வாங்கி செல்லவும் விவசாயிகள், வியாபாரிகள் சிரமப்பட்டனர்.

தற்போது தென் மாநிலங்களில் தேர்தல் நிறைவடைந்து, பணம் எடுத்து செல்வதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், நேற்று அதிக எண்ணிக்கையில் விவசாயிகள், வியாபாரிகள் வந்தனர்.

தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநில வியாபாரிகள் அதிகம் வந்தனர். தற்போது கோடை மழை துவங்கியதாலும், தென் மாநிலங்களிலும் பரவலாக மழை துவங்கியதாலும் ஆர்வமாக மாடுகளை வாங்கி சென்றனர். வரத்தான மாடுகளில், 90 சதவீதம் விற்றன.

இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us