/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மின்வாரிய கேங்மேன் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
மின்வாரிய கேங்மேன் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 02, 2024 04:00 AM
ஈரோடு: ஈரோடு, ஈ.வி.என்.சாலையில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன், தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாநில துணைத் தலைவர் அறிவழகன் தலைமை வகித்தார். மண்-டல தலைவர் வடிவேல், செயலாளர் மகேந்திரன் ஆகியோர் முன்-னிலை வகித்தனர். மின்வாரியத்தில் காலியாக உள்ள, 63,000 பணியிடங்களில், அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வரும் கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக மாற்றி நிய-மிக்க வேண்டும். கேங்மேன் பணியாளர்களுக்கு, சொந்த ஊரில் பணியிட மாற்றம் வழங்க வேண்டும். உடற்தகுதி தேர்வு, எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மின்வாரிய நிர்வாகக்-குழு அனுமதி வழங்கியும் பணி அமர்த்தம் செய்யப்படாமல் நிலுவையில் உள்ள, 5,493 கேங்மேன்களுக்கு உடன் பணி ஆணை வழங்க வேண்டும் என, வலியுறுத்தினர்.