sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 11, 2026 ,மார்கழி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'கால்நடை வளர்ப்பில் பாலினம் அறியப்பட்ட தொழில் நுட்பம்'

/

'கால்நடை வளர்ப்பில் பாலினம் அறியப்பட்ட தொழில் நுட்பம்'

'கால்நடை வளர்ப்பில் பாலினம் அறியப்பட்ட தொழில் நுட்பம்'

'கால்நடை வளர்ப்பில் பாலினம் அறியப்பட்ட தொழில் நுட்பம்'


ADDED : மே 19, 2024 03:07 AM

Google News

ADDED : மே 19, 2024 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி வேளாண் அறிவியல் நிலையத்தின் முதன்மை விஞ்ஞானி அழகேசன், விஞ்ஞானி (கால்நடை அறிவியல்) கார்த்திக் ஆகியோர், கால்நடை வளர்ப்பில் பாலினம் அறியப்பட்ட விந்தணு தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு யோசனை தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது:

தரமான கன்றுகளை பெறுதல், நோய் பரவலை தடுத்தல், அடுத்தடுத்த கன்றுகளுக்கு இடையேயான நாட்களை குறைத்தல், செயற்கை முறை கருத்தரித்தலின் முக்கிய பயனாகும். அந்த வரிசையில் தற்போது, 'விந்தணு பிரித்தல்' எனப்படும், பாலினம் அறியப்பட்ட விந்தணு தொழில்நுட்பம், வளர்ந்து வரும் உயிர் தொழில் நுட்பத்தின் ஓர் அங்கமாக கருதப்படுகிறது.

நல்ல தரமான காளைகளில் இருந்து எடுக்கப்படும் விந்து, 196 டிகிரி செல்சியஸ் உறைநிலையில் பாதுகாத்து பயன்படுத்தப்படுகிறது. கால்நடை வளர்ப்பில் பொருளாதார சூழ்நிலையால், காளை கன்றுகளை விட கிடாரிகளை பெறுவதையே பண்ணையாளர் விரும்புகின்றனர். அதை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட பாலினம் அறியப்பட்ட விந்தணு தொழில் நுட்பமாகும். இதை செயல்படுத்துவதன் மூலம் பண்ணையாளர்களின் தேவைக்கேற்ப கிடாரி அல்லது காளை கன்றுகளை பெற இயலும். பாலினம் அறியப்பட்ட விந்தணு ஊசியானது அனைத்து அரசு கால்நடை மருத்துவமனைகளிலும், 160 ரூபாய் விலையில் கிடைக்கும். இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us