sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குருநாதசுவாமி கோவில் பண்டிகை அந்தியூரில் பஸ் வழித்தடத்தில் மாற்றம்

/

குருநாதசுவாமி கோவில் பண்டிகை அந்தியூரில் பஸ் வழித்தடத்தில் மாற்றம்

குருநாதசுவாமி கோவில் பண்டிகை அந்தியூரில் பஸ் வழித்தடத்தில் மாற்றம்

குருநாதசுவாமி கோவில் பண்டிகை அந்தியூரில் பஸ் வழித்தடத்தில் மாற்றம்


ADDED : ஆக 07, 2024 01:35 AM

Google News

ADDED : ஆக 07, 2024 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர், அந்தியூர் குருநாதசுவாமி கோவிலின் நடப்பாண்டு தேர்த்திருவிழா இன்று தொடங்கி, ௧௧ம் தேதி வரை நடக்கிறது. இதில் லட்சக்கணக்கில் மக்கள் கலந்து கொள்வர்.

இதனால் மக்கள் கோவிலுக்கு நெரிசலின்றி வந்து செல்வதற்காக, போக்குவரத்து துறை சார்பில் அந்தியூர் ரவுண்டானா, வாரச்சந்தை வளாகத்தில் சிறப்பு பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது.

அத்தாணி மார்க்கமாக கோவிலுக்கு வரும் வாகனங்கள், சின்னதம்பிபாளையம், ஜீவா செட், மைக்கேல்பாளையம் வழியாக வனக்கோவிலுக்கு செல்ல வேண்டும்.

ஆப்பக்கூடல் வழியாக வரும் வாகனங்கள், ஜி.ஹெச்.கார்னர் வழியாக புதுக்காடு சாலையில் வனக்கோவிலுக்கு செல்ல வேண்டும். பவானி, அம்மாபேட்டை மற்றும் வெள்ளித்திருப்பூர் வழியாக வரும் வாகனங்கள், அண்ணாமடுவு, அந்தியூர் பஸ் ஸ்டாண்ட் வந்த பின், அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு பஸ் ஸ்டாண்டுக்கு செல்ல வேண்டும்.

அங்கிருந்து கோவிலுக்கு இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் மூலம், குருநாதசுவாமி மற்றும் வனக்கோவிலுக்கு மக்கள் சென்று வரலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us