ADDED : ஜூலை 06, 2024 07:09 AM
சுரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டி, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நிலக்கடலை ஏலம் நடந்தது. மொத்தம், 45 கிலோ எடையில், 92 நிலக்கடலை மூட்டை வரத்தானது. இதில் நிலக்கடலை (காய்ந்தது) முதல் தரம், 60 ரூபாய் முதல் 63.20 ரூபாய்; இரண்டாம் ரகம், 57 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை ஏலம் போனது. மொத்தம், 1.95 லட்சம் ரூபாய்க்கு விற்பனையா-னது. பொள்ளாச்சி, உடுமலை பகுதி வியாபாரிகள் ஏலத்தில் பங்-கேற்றனர்.
ஈரோடு காய்கறி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்து, சில நாட்களுக்கு முன், ஒரு கிலோ, 90 ரூபாய் வரை உயர்ந்தது. சத்தி, தாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இரு நாட்களாக தக்காளி வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் விலை குறைந்து வருகிறது. ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ தக்காளி, 35 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்றது.
அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 46 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தா-னது. முதல் தரம் கிலோ, 90.10 ரூபாய் முதல், 9௪ ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 60.90 ரூபாய் முதல், 87.19 ரூபாய் வரை, 1,751 கிலோ கொப்பரை, 1.57 லட்சம் ரூபாய்க்கு விற்ப-னையானது.
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ மல்லிகை பூ, 640 ரூபாய்க்கு ஏலம் போனது. இதேபோல் முல்லை-190, காக்கடா-150, செண்டுமல்லி-75, கோழிகொண்டை-40, ஜாதிமுல்லை-600, கனகாம்பரம்-600, சம்பங்கி-50, அரளி-80, துளசி-40, செவ்வந்தி-320 ரூபாய்க்கு விற்றது.
தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலத்துக்கு, 1,687 காய் வரத்தானது. ஒரு காய் அதிகபட்சம், 19.10 ரூபாய், குறைந்தபட்சம், ௧5.30 ரூபாய்க்கும் விலை போனது.