sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

34 ஆண்டு காத்திருப்புக்கு அர்த்தம் தந்த தீர்ப்பு 3 நிமிடம் கூட நிற்காத கலெக்டரால் 'கதறிய' மக்கள்!

/

34 ஆண்டு காத்திருப்புக்கு அர்த்தம் தந்த தீர்ப்பு 3 நிமிடம் கூட நிற்காத கலெக்டரால் 'கதறிய' மக்கள்!

34 ஆண்டு காத்திருப்புக்கு அர்த்தம் தந்த தீர்ப்பு 3 நிமிடம் கூட நிற்காத கலெக்டரால் 'கதறிய' மக்கள்!

34 ஆண்டு காத்திருப்புக்கு அர்த்தம் தந்த தீர்ப்பு 3 நிமிடம் கூட நிற்காத கலெக்டரால் 'கதறிய' மக்கள்!


ADDED : செப் 03, 2024 03:55 AM

Google News

ADDED : செப் 03, 2024 03:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: அந்தியூர், சத்தி சாலை, அண்ணா சாலையை சேர்ந்த மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு வழங்க வந்தனர். குறைதீர் கூட்டம் முடிந்து, காரில் ஏற கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியே வந்தார்.

அவரை பார்த்த மக்கள், மனு வழங்கி முறையிட வந்தனர். ஆனால், மனுவை பெறாமல், காரில் ஏறி கலெக்டர் சென்றுவிட்டார். பின் வளாகத்தில் கதறி அழுதபடி மக்கள் கூறியதாவது: அந்தியூர் தாலுகா, 'அ' கிராமத்தில், 1990ல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரால், சவர தொழிலாளர் மற்றும் சலவை தொழிலாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க ஆய்வு செய்து, நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொண்டார்.

அந்நில உரிமையாளர், நீதிமன்றத்தை அணுகிய நிலையில், 34 ஆண்டுகளுக்கு பின் அரசுக்கு சாதகமாக, 6 மாதத்துக்கு முன் தீர்ப்பு கிடைத்தது. எனவே எங்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும். கூலி வேலை செய்யும் எங்களுக்கு, வீடு கட்டுவது கனவாகவே உள்ளது. எங்களுக்குரிய இடத்தில் பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர். சிறிது நேரம்

காத்திருந்த பின், திரும்பி சென்றனர்.






      Dinamalar
      Follow us