ADDED : ஆக 18, 2024 02:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பாளையம்: டி.என்.பாளையத்தை அடுத்த கே.என்.பாளையம் அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் லட்சுமி 37; இவரின் கணவர் ஈஸ்வரன், 37; லட்சுமி கூலி தொழிலாளி. ஈஸ்வரன் சத்தி பூ மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்கிறார்.
தினமும் குடிபோதையில் லட்சுமியை சந்தேகப்பட்டு பேசியுள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட வாய் தகராறில், லட்சுமியை கத்தியால் கிழித்துள்ளார். பலத்த காயமடைந்த நிலையில், பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பான புகாரில், பங்களாப்புதுார் போலீசார் ஈஸ்வரனை கைது செய்தனர்.