/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நம்பியூரில் குடிநீர் கேட்டு மறியல்
/
நம்பியூரில் குடிநீர் கேட்டு மறியல்
ADDED : ஆக 30, 2024 04:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நம்பியூர்: நம்பியூர் பேரூராட்சி ஐந்தாவது வார்டு ரங்கநாதபுரத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகிக்கப்-படும் நிலையில், 20 நாட்களாக தண்ணீர் விடவில்லை எனக்கூறி, 50க்கும் மேற்பட்ட பெண்கள், பேரூராட்சி அலுவலகம் எதிரே, நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கோபி-நம்பியூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்-பட்டது. நம்பியூர் போலீசார், பேரூராட்சி நிர்வாகத்தினர் தண்ணீர் முறையாக வழங்குவதாக கூறியதால், பெண்கள் கலைந்து சென்-றனர்.

