/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.3.22 லட்சத்துக்கு விளை பொருள் விற்பனை
/
ரூ.3.22 லட்சத்துக்கு விளை பொருள் விற்பனை
ADDED : ஆக 22, 2024 01:25 AM
ஈரோடு, ஆக. 22-
மொடக்குறிச்சி, ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, 10 ஆயிரத்து, 437 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர்.
ஒரு கிலோ தேங்காய், 29.92 முதல், 34.19 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 3,931 கிலோ எடை கொண்ட தேங்காய், ஒரு லட்சத்து, 28 ஆயிரத்து, 843 ரூபாய்க்கு விற்பனையானது. கொப்பரை தேங்காய், 86 மூட்டைகள் வரத்தாகி, முதல் தரம் ஒரு கிலோ, 97.89 முதல், 102.59 ரூபாய் வரையிலும், இரண்டாம் தரம் ஒரு கிலோ, 75.60 முதல், 91.99 ரூபாய் வரையிலும் விற்பனையானது. மொத்தம், 2,045 கிலோ எடை கொண்ட கொப்பரை தேங்காய், ஒரு லட்சத்து, 93 ஆயிரத்து, 487 ரூபாய்க்கு விலை போனது.தேங்காய், கொப்பரை தேங்காய் ஆகியவை சேர்ந்து, மூன்று லட்சத்து, 22 ஆயிரத்து, 330 ரூபாய்க்கு விற்பனையானது.