sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பாரதியார் பல்கலையில் குளறுபடி தேர்ச்சி பெற்றும் மாணவர் தவிப்பு

/

பாரதியார் பல்கலையில் குளறுபடி தேர்ச்சி பெற்றும் மாணவர் தவிப்பு

பாரதியார் பல்கலையில் குளறுபடி தேர்ச்சி பெற்றும் மாணவர் தவிப்பு

பாரதியார் பல்கலையில் குளறுபடி தேர்ச்சி பெற்றும் மாணவர் தவிப்பு


ADDED : ஜூலை 18, 2024 10:54 PM

Google News

ADDED : ஜூலை 18, 2024 10:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:பாரதியார் பல்கலை குளறுபடியால், பி.ஏ., பொருளாதார மாணவர்கள், அரசுப்பணி தேர்வுக்கும், உயர் கல்விக்கும் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலைகழகத்தின் கீழ், ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சி.என்.கல்லுாரி, வாசவி கல்லுாரி, சத்தி மற்றும் நம்பியூரில் அரசு கலை கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் பி.ஏ., பொருளாதாரம் படிக்கும் மாணவர்கள் ஆறாவது செமஸ்டரில் கம்ப்யூட்டர் சிஸ்டம் பிராக்டிக்கல் தேர்வெழுதினர். இரு நாட்களுக்கு முன் வழங்கப்பட்ட மதிப்பெண் பட்டியலில், மதிப்பெண்ணில் தேர்ச்சியாகவும், தேர்வு முடிவில் தேர்ச்சி பெறவில்லை எனவும் பிழையாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவியர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுபற்றி மாணவர்கள் கூறியதாவது:

இந்த தேர்வு, 25 மதிப்பெண்ணுக்கு நடந்தது. 24 மதிப்பெண் பெற்ற மாணவரும் தேர்ச்சி பெறவில்லை என குறிப்பிட்டுள்ளனர். இதனால் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (ஜூலை 19) கடைசி நாள். மதிப்பெண் சான்றிதழில் தவறாக குறிப்பிட்டதால் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் பி.எல்., படிப்புக்கு விண்ணப்பிக்க வரும், 24ம் தேதி கடைசி நாள். இதற்கும் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மட்டும், 200 மாணவ, மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிற மாவட்ட மாணவர்களும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதுபற்றி பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு பிரிவில் தகவல் தெரிவித்தபோது, 20 நாட்களில் தவறு சரி செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். பல்கலை கழகத்தின் தவறால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். இவ்வாறு மாணவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us