/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'குட்கா' விற்பனை மூவருக்கு அபராதம்
/
'குட்கா' விற்பனை மூவருக்கு அபராதம்
ADDED : மே 13, 2024 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் தலைமையிலான அலுவலர்கள், மாநகராட்சி பகுதிகளில், 20க்கும் மேற்பட்ட கடைகளில் புகையிலை, குட்கா பொருட்கள் விற்கப்படுகிறதா? என ஆய்வு மேற்
கொண்டனர்.
இதில் மூன்று கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள் விற்றதை கண்டுபிடித்து,
கடை உரிமையாளர்களுக்கு தலா, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இந்த கடைகளை 'சீல்' வைக்க வருவாய் துறையினருக்கு பரிந்துரை
செய்துள்ளனர்.