/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
/
கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ADDED : ஆக 19, 2024 02:58 AM
கோபி: பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட்டுகிறது. குளிக்கும் வசதி எளிது என்பதால், தினமும் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். நேற்று வார விடுமுறை என்பதால் திருப்பூர், சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பயணிகள் குவிந்தனர். தடுப்பணை வழியாக வெளியேறிய, 450 கன அடி தண்ணீரில், ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
மதியம் முதல் தடை
கொடிவேரி தடுப்பணை பகுதியில் நேற்று மதியம், 12:00 மணிக்கு, பவானி ஆற்றில், 600 கன அடி தண்ணீர் வெளியேறியது. தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால், தடுப்பணையில் குளிக்க மதியம், 1:00 மணி முதல், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.