/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'மழை காலம் துவங்குவதால் மின் பயன்பாட்டில் கவனம் தேவை'
/
'மழை காலம் துவங்குவதால் மின் பயன்பாட்டில் கவனம் தேவை'
'மழை காலம் துவங்குவதால் மின் பயன்பாட்டில் கவனம் தேவை'
'மழை காலம் துவங்குவதால் மின் பயன்பாட்டில் கவனம் தேவை'
ADDED : ஆக 09, 2024 02:37 AM
ஈரோடு: மழை காலம் துவங்குவதால், மின் பயன்பாட்டில் கவனமாக செயல்பட வேண்டும் என, ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்-பார்வை பொறியாளர் கலைசெல்வி தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மின்சார ஒயரிங் பணிகளை, அரசு உரிமம் பெற்ற மின் ஒப்பந்த-தாரர்கள் மூலம் மட்டுமே செய்ய வேண்டும். பிளக்குகளை பொருத்தும் முன்பும், எடுக்கும் முன்பும் சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும். மின் கசிவு தடுப்பான்களை இல்லங்களில் பயன்ப-டுத்த வேண்டும். ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை ஒயரிங் சரி செய்து கொள்ள வேண்டும். குளியலறை, கழிப்பறையில் ஈரமான இடங்-களில் சுவிட்சை பொருத்தக்கூடாது. மின் கம்பம், அவற்றை தாங்கும் கம்பிகளில் கால்நடைகளை கட்டக்கூடாது. மின் கம்பங்-களில் பந்தல் அமைக்கவும், விளம்பர பலகையும் கட்டக்கூடாது.
மழை காலத்தில் மின் மாற்றி, மின் கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள், ஸ்டே ஒயர்கள், அறுந்து விழுந்த மின் கம்பிகளின் அருகே செல்லக்கூடாது. மின் வேலிகள் அருகே சிறுநீர் கழிக்கக்-கூடாது. மின்சார தீ விபத்துக்கு, தீயணைப்பான்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இடி, மின்னலின்போது வெட்ட வெளி, மரத்தடி, தண்ணீர் தேங்கிய இடத்தில் நிற்கக்கூடாது.
மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தாலும், மின் கம்பிகள் அறுந்து கிடந்தாலும், 94987 94987, வாட்ஸ் ஆப் எண்- 94458 51912 என்ற எண்களில் புகைப்படத்துடன் தெரிவிக்கலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.